Sunday 16 November 2014

என்றும் மறவா...


வான்நோக்கி நின் கனவுகள் விருட்சமாய் வளர,
சீற்றேடுத்த காட்டாற்றாய் முயற்சிகளை உரமாக்குவாய்...
சத்ருக்களின் எண்ணங்கள் உன் பக்கம் நிறுத்தினால்,
அச்சமயம் உன் வாழ்வே அச்சமயம் ஆகும்...
எதிர்த்து நின்று துணிவின் துணையோடு,
விளைக்கப்பட்ட தீய சக்திகளை தகர்த்தெறிவாய்...
பணிவையும் பரிவையும் ஈர் கண்ணாய் ஆக்காவிடில்,
வாழ்கை என்னும் அந்ஞானம் அஞ்ஞானம் ஆகிவிடும்...
 இலட்சியங்கள் கொள்வாய் எட்டாகனியாய்,
போராடி அவைகளை எட்டாக்குவாய் நீ...
தன்னிலை கடந்து பொதுநிலை காணும் நேரம்,
அடைவாய் உன் பிறப்பின் கர்மத்தை...
ரசிகையாகிய, கவிபுதல்வியாகிய, என் தோழியாகிய உனக்கு,
என்றும் மறவா உன் தோழி எழுதுவது...

 

No comments:

Post a Comment